சனி, மார்ச் 29, 2014

வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் : திமுக புகார்

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுகவினர் மீதும், அதிமுக வேட்பாளர் அன்வர் ராஜா மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமாரிடம் திமுக புகார் மனு அளித்துள்ளது. திமுக தலைமைக்கழக வழக்கறிஞர் பரந்தாமன், நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமாரிடம் புகார் மனு தந்தார்.

 அதில், கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி, அறந்தாங்கி தாலுகாவில் மூக்குடி, நரிக்குறவர் காலனி பகுதிகளில் வாக்காளர்களுக்கு அதிமுக நிர்வாகிகள் பணம் தந்த காட்சி ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அந்த வீடியோ காட்சி அடங்கிய சிடி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக