செவ்வாய், ஏப்ரல் 29, 2014

பூஜையில் பெண்ணுடன் சாமியார் உல்லாசம்: டி.வி.யில் வீடியோ ஒளிபரப்பானதால் ஓட்டம்

வாஸ்து நிபுணர் மற்றும் ஜோசியக்காரர் என்று தன்னை தானே விளம்பரப்படுத்திக்கொண்ட சாமியாரான தேவி ஸ்ரீ ராமசாமி என்பவர் கர்நாடகாவில் ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது ஆசிரமத்தில் பூஜையின் போது பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்த வீடியோ காட்சி கன்னட டி.வி. சேனல்களில் நேற்று அதிரடியாக ஒளிபரப்பானது. 
இந்த வீடியோ டி.வி.யில் ஓட ஆரம்பித்தவுடன் சாமியாரின் ஓட்டமும் ஆரம்பமானது. டி.வி.யில் வீடியோ ஒளிபரப்பான தகவல் கிடைத்தவுடன் சாமியாரின் டிரைவர் அவரை காப்பாற்றி காரில் ஏற்றிச்சென்றுவிட்டார். அந்த ஆசிரமத்தில் சீடனாக இருக்கும் வசந்த் என்பவரும், ஆசிரமத்தின் ஊழியரான உதயா என்பவரும் சாமியாரின் லீலைகளை பார்த்து வெறுப்புற்று அவரை கையும் களவுமாக பிடிக்க அவருக்கு தெரியாமலேயே இந்த வீடியோவை எடுத்துள்ளனர். 

பின்னர் இந்த வீடியோவை அவர்கள் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் கொடுத்துள்ளனர். இதை அந்த தொலைக்காட்சி ஒளிபரப்பியவுடன் சாமியாரின் தீவிரமான சீடர்கள் கடும் கோபத்துடன் ஆசிரமத்தை அடித்து நொறுக்கினர். காரில் தப்பிய சாமியார் தற்போது தமிழகத்தில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவருடன் இருக்கும் பெண் யாரென்று இதுவரை தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக