வியாழன், ஏப்ரல் 24, 2014

ஜனநாயக கடமையை நிறைவேற்றிய முதியவர்கள்-மாற்றுதிறனாளிகள்

நெல்லை– தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
ஏராளமான பொதுமக்கள் அதிகாலை 6 மணிக்கே வாக்குச்சாவடி மையம் முன்பு காத்திருப்பதை காண முடிந்தது.

குறிப்பாக ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் வாக்குப்பதிவு செய்ய வந்திருந்தனர். இவர்களுக்கு போட்டியாக வயதான முதியவர்களும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு மையங்களில் காத்திருந்து ஓட்டு போட்டு சென்றனர்.

செங்கோட்டை, தென்காசி பகுதிகளில் ஏராளமான முதியவர்கள் தங்களால் நடக்க முடியாவிட்டாலும் வாகனங்களில் வந்து ஓட்டு போட்டு சென்றனர். ஒரு சில மூதாட்டிகள் ஊன்றுகோலுடன் வந்து ஆர்வமுடன் ஓட்டு போட்ட னர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக