வெள்ளி, ஏப்ரல் 25, 2014

மோடி மீது வழக்கு பதிவு செய்ய காங்கிரஸ் வற்புறுத்தல்

குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி, வாரணாசி தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதையும், அதற்கு முந்தைய அவரது வாகன ஊர்வலத்தையும் டெலிவிஷனில் ஒளிபரப்பியது, அப்பட்டமான தேர்தல் விதிமீறல் என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளரும், மத்திய மந்திரியுமான ஆனந்த் சர்மா கூறினார்.

அதாவது, நேற்று தேர்தல் நடைபெற்ற 117 தொகுதிகளிலும் டெலிவிஷனில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது, விதிமீறல் ஆகும் என்று அவர் கூறினார். எனவே, மோடி மற்றும் இதில் தொடர்புடைய பா.ஜனதா தலைவர்கள் அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.

நன்கு திட்டமிட்டு, ஓட்டுப்பதிவு நாளில் மனுதாக்கலுக்கு பா.ஜனதா ஏற்பாடு செய்திருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக