ஞாயிறு, ஏப்ரல் 27, 2014

திமுக. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்: மு.க.ஸ்டாலின்

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஹாங்காங் செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அவருடன் மனைவி துர்கா, மருமகள், பேரன் – பேத்திகள் 7 பேர் வந்திருந்தனர்.

நள்ளிரவு- 1.15 மணிக்கு அவர் விமானம் மூலம் ஹாங்காங் புறப்பட்டு சென்றார். முன்னதாக மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். 
அப்போது அவர் கூறியதாவது:–
கேள்வி:– 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தயாளு அம்மாளை சேர்த்திருக்கிறார்களே?
பதில்:– தயாளு அம்மாளை நீதிமன்றம் இந்த வழக்கில் சேர்த்திருக்கிறது. அதை நீங்கள் நீதிபதியிடம்தான் கேட்க வேண்டும்.
கேள்வி:– பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி எப்படி இருக்கும்?
பதில்:– தி.மு.க.வின் வெற்றி நல்ல பிரகாசமாக இருக்கிறது. 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும்.
கேள்வி:– தேர்தல் அமைதியாக நடந்ததாக போலீஸ் டி.ஜி.பி.க்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளாரே?
பதில்:– தேர்தல் அமைதியாக நடந்ததா என்பதை நாட்டு மக்கள் தான் சொல்ல வேண்டும்.
கேள்வி:– முதல்– அமைச்சர் கொடநாடு பயணம் பற்றி?
பதில்:– இது வழக்கமான ஒன்றுதான். புதிதல்ல. இதில் அதிருப்தி அடைவதற்கு ஒன்றுமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக