செவ்வாய், ஏப்ரல் 29, 2014

அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தை துவம்சம் செய்த சூறைக்காற்று

அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தின் பல பகுதியை தாக்கிய பயங்கர சூறைக்காற்று, சில வீடுகள் மற்றும் மரங்களையும், விளம்பரப் பலகைகளையும் சாய்த்து, வீழ்த்தி துவம்சம் செய்தது. பல வீடுகளுக்கு செல்லும் மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. 
மேற்கு டுபேலோ நகரை பதம் பார்த்த இந்த அதிவேக சூறைக்காற்றையடுத்து, கன மழையும் அதன் பாதிப்பாக கடும் புயலும் ஏற்படலாம் என்பதால் டுபேலோ மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

உயிர் பலி, காயம், பொருட்சேதம் குறித்த உடனடி தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக