செவ்வாய், ஏப்ரல் 29, 2014

பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: ஜப்பான் வீரர் நிஷிகோரி சாம்பியன்

உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்தது. இதன் ஒற்றையர் இறுதிப்போட்டியில் ஜப்பான் வீரர் நிஷிகோரி, கொலம்பியா வீரர் சான்டியாகோ ஜிரால்டோவை சந்தித்தார். 

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நிஷிகோரி 6-2, 6-2 என்ற நேர்செட்டில் சான்டியாகோவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார். 

களிமண் தரை போட்டியில் நிஷிகோரி வென்ற முதல் பட்டம் இதுவாகும். அத்துடன் பார்சிலோனா ஓபன் பட்டத்தை வென்ற முதல் ஜப்பான் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக