திங்கள், ஏப்ரல் 21, 2014

இஸ்லாமியர்களிடம் ஜெகத்ரட்சகன் வாக்கு சேகரிப்பு

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் பல்லாவரம் மசூதியில் தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியர்களிடம் வாக்கு கேட்டார்.
அவருடன் மாவட்ட கழக செயலாளர் தா.மோ. அன்பரசன், பல்லாவரம் நகரச் செயலாளர் இ.கருணாநிதி கண்டோன்மெண்ட் பாபு, சிவக்குமார், சதீஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் சென்று ஓட்டு சேகரித்தனர்.

பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகளுக்கு கலைஞர் ஆட்சியில் கொண்டு வந்த மேம்பாலங்கள், குடிநீர் வசதி, சாலை வசதிகளை சுட்டிக் காட்டி ஜெகத்ரட்சகனுக்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு போடும் படி மாவட்ட கழக செயலாளர் தா.மோ.அன்பரசன் கேட்டுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக