வெள்ளி, ஏப்ரல் 25, 2014

கர்நாடகாவில் தேவேகவுடா கட்சி வேட்பாளர் மாரடைப்பால் மரணம்

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கர்நாடக மாநில தலைவர் கிருஷ்ணப்பா.
இவர் தும்கூர் பாராளு மன்ற தொகுதியில் போட்டியிட்டார். அந்த தொகுதிக்கு கடந்த 17–ந்தேதி தேர்தல் நடந்தது.இந்த நிலையில் கிருஷ்ணப்பா மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 68.

தேர்தல் நடந்து முடிந்திருக்கும் வேளையில் கிருஷ்ணப்பா மரணம் அடைந்த தால் தும்கூர் தொகுதிக்கு மறு தேர்தல் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது கிருஷ்ணப்பா வெற்றி பெற்றிருந்தால் அங்கு மறு தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக