திங்கள், ஏப்ரல் 28, 2014

ஐ.பி.எல் : ஸ்மித், மெக்கல்லம் அதிரடியில் சென்னை அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 17வது ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. 
இதனை தொடர்ந்து அந்த அணியின் தொடக்க வீரர்களான பிஞ்ச் (44), தவான் (7) ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வார்னர் (0), ராகுல் (25) மற்றும் வேணுகோபால் ராவ் (13) ஆகிய ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். சமி (23) மற்றும் சர்மா (17) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. 

இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 146 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மித் (66) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து மெக்கல்லம் (40), ரெய்னா (14), பிளெஸ்சிஸ் (0) மற்றும் ரவீந்திர ஜடேஜா (6) ரன்களுடன் ஆட்டமிழந்தனர். 

தோனி (13) மற்றும் மன்ஹாஸ் (3) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  இறுதியில், சென்னை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 19.3 ஓவர்களில் 146 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக