வியாழன், ஏப்ரல் 17, 2014

முஸஃபர் நகர் கலவரம்: கமிஷன் விசாரணை துவங்கியது!

முஸஃபர் நகர்: உத்தரபிரதேச மாநிலம் முஸஃபர் நகரில் நிகழ்ந்த கலவரம் தொடர்பாக மாநில அரசு நியமித்த ஒரு நபர் கமிஷன் தனது விசாரணையை துவக்கியுள்ளது.


அலகாபாத் உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி விஷ்ணு சகாய் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷனை உ.பி மாநில அரசு நியமித்தது. இக்கமிஷன் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலத்தை வருகிற 21-ஆம் தேதி வரை பதிவுச் செய்யும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கமிஷன் தனது அறிக்கையை மே 15-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கும் என கருதப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்ட இக்கமிஷன் கலவரம் பாதித்த பகுதிகளில் இதுவரை ஒரு முறை சென்றுவந்துள்ளது. கலவரம் தொடர்பாக 700க்கும் மேற்பட்ட மனுக்களைப் பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக