சனி, ஏப்ரல் 12, 2014

மோடி பிரதமராவது இந்தியாவுக்கு கேடு விளைவிக்கும்: வெளிநாடு வாழ் இந்திய கலைஞர்கள், கல்வியாளர்கள் கடும் கவலை!

இந்தியாவின் அடுத்த பிரதமராக இந்துத் தேசியவாத தலைவரான நரேந்திர மோடி வரக்கூடிய தன்மை குறித்து இந்தியாவின் பிரபல கலைஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் பலர் கடுமையான கவலையை வெளியிட்டுள்ளனர்.


த கார்டியன் பிரிட்டிஷ் நாளிதழுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர்கள் இந்தக் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.சிற்பக் கலைஞர் அனிஷ் கபூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் இந்தியக் கலைஞர்கள் பலர் இந்தக் கடிதத்தில் கையொப்பம் இட்டுள்ளனர்.
பல்வேறு சமூகங்களையும் மதிக்கின்ற நாடொன்றில் மோடி பிரதமராக வருவது இந்தியாவின் எதிர்காலத்துக்கு கேடு விளைவிக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ள பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையிலேயே இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக