வியாழன், மே 15, 2014

தென் கொரியாவின் காற்பந்தாட்ட வீரர் பார்க் ஜி சுங் ஓய்வு

2002-ஆம் ஆண்டில் உலக கிண்ண காற்பந்து போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு தேர்வானதைத் தொடர்ந்து UEFA சாம்பியன்ஸ் லீக் ஃபைனல் போட்டியில் ஆசியாவின் முதல் போட்டியாளர் என்ற புகழையும் பெற்ற பார்க், மென்சஸ்டர் யுனைடட் காற்பந்து குழுவின் முன்னாள் காற்பந்து வீரர் ஆவார்.

33 வயது நிரம்பிய பார்க், தமது முட்டியில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனை காரணமாக தொடர்ந்து இந்த துறையில் நிலைக்க இயலாமல் போய் விட்டதாக பார்க் தெரிவித்துள்ளார்.
தம்முடைய இந்நிலையைக் குறித்து தாம் வருந்தவில்லை என்றும் தாம் சாதித்த சாதனைகளுக்கு பக்க பலமாய் இருந்த அனைவருக்கும் நன்றி கூறுவதாகவும் சுவொனில் உள்ள தமது காற்பந்து மையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பார்க் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக