வியாழன், மே 29, 2014

2 போலீஸ்காரர் உள்பட 7 பேர் கும்பல் 2 சிறுமிகளையும் கற்பழித்து கொலை.

உத்தரப்பிரதேச மாநிலம் படான்நகர் அருகே உள்ளது கத்ரா கிராமம். இங்கு வசிக்கும் தலித் குடும்பத்தை சேர்ந்த 2 சகோதரிகள் நேற்று முன்தினம் இரவு திடீர் என்று மாயமாகி விட்டனர்.

இருவருக்கும் 14, 15 வயதுதான் இருக்கும். பல இடங்களில் தேடினார்கள். இந்த நிலையில் நேற்று காலை அருகில் உள்ள கிராமத்தில் ஒரு மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார்கள்.உடனே கிராம மக்கள் அங்கு திரண்டனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது. 2 சிறுமிகளும் கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வற்புறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உயர் போலீஸ் அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தியதில் 2 போலீஸ்காரர் உள்பட 7 பேர் கும்பல் 2 சிறுமிகளையும் கற்பழித்து கொலை செய்து மரத்தில் தொங்க விட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸ்காரர்கள் சர்வேஸ் யாதவ், ரக்ஷபால் யாதவ் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டனர்.

உடனடியாக 2 போலீஸ் காரர்களும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். அவர்கள் தலைமறைவாகி விட்டனர். குற்றவாளிகளில் பப்புயாதவ் என்பவன் மட்டும் கைது செய்யப்பட்டான். மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கற்பழிப்பில் ஈடுபட்ட 2 போலீஸ்காரர்களும் உனஷத் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தனர். அங்கு பணிபுரியும் அனைத்து போலீஸ்காரர்களையும் சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை உயர் அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக