திங்கள், மே 12, 2014

லிபியாவுக்கு அருகில் படகு கடலில் மூழ்கியதில் சுமார் 40 பேர் பலி

லிபியா கடற்பகுதி வழியே ஆப்பிரிக்காவின் சகாரா பகுதி மக்கள் பயணித்துக் கொண்டிருந்த படகு ஒன்று நேற்று கடலில் மூழ்கியதில் குறைந்தது 40 பேர் பலியானதாகவும், 51 பேர் காப்பாற்றப்பட்டதாகவும் அந்நாட்டு அரசு தகவல்கள் தெரிவித்துள்ளன. தலைநகர் திரிபோலியிலிருந்து 37 மைல் கிழக்கே உள்ள ரமி கால் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக லிபியாவின் உள்துறை அமைச்சகத் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

லிபியாவின் பாதுகாப்பற்ற கடல் எல்லைகளும், மத்தியதரைக் கடலைத் தாண்டி இத்தாலி, மால்டா போன்ற நாடுகளை எளிதில் அணுகும் வண்ணம் அமைந்துள்ள அந்நாட்டின் நிலப்பரப்பும் ஐரோப்பாவை அடைய முயற்சி செய்யும் வடக்கு ஆப்பிரிக்க மக்களுக்கு லிபியாவை பொது வழித்தடமாக மாற்றியுள்ளது. இந்தப் பயணத்திற்காக அவர்கள் ஒவ்வொருவரும் தலா 1000 டாலருக்கு மேல் சட்ட விரோத குழுக்களிடம் பணம் செலுத்துவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக