வெள்ளி, மே 02, 2014

போர்ச்சுகல் ஓபன்அரை இறுதியில் சானியா ஜோடி

போர்ச்சுகல் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, இந்தியாவின் சானியா மிர்சா-காரா பிளாக் (ஜிம்பாப்வே) ஜோடி தகுதி பெற்றது.கால் இறுதியில் சில்வியா சோலர் (ஸ்பெயின்) -ஷுவாய் ஸாங் (சீனா) ஜோடியுடன் நேற்று மோதிய சானியா ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரை இறுதிக்கு முன்னேறியது. மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் ரஷ்யாவின் ஸ்வெட்லனா கஸ்னட்சோவா 6-4, 6-1 என்ற நேர் செட்களில் யூஜெனி பவுச்சார்டை (கனடா) வீழ்த்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக