வியாழன், மே 01, 2014

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி, 12 பேர் காயம்

பெங்களூரிலிருந்து சென்னை வழியாக கவுகாத்தி செல்லும் ரயில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த ரயில் 9-வது பிளாட்பாரத்தில் நின்றது.அப்போது காலை 7.20 மணியளவில் பயணிகள் ரயிலில் ஏறியும், இறங்கியும் கொண்டிருந்தனர். அப்போது எஸ் 5 ரயில் பெட்டியில், 69-வது இருக்கையின் கீழ் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. 
இச்சம்பவம் சுவாதி என்ற 21 வயது இளம் பெண் பலியாகியுள்ளார். இவர் ஆந்திரா குண்டூரைச் சேர்ந்தவர். பெங்களூரிலிருந்து குண்டூர் செல்வதற்காக, இந்த ரயிலில் பயணித்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த அனைவரும், ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக