செவ்வாய், மே 13, 2014

மூன்று அம்னோ பிரதிநிதிகள் இராஜினாமா

புக்கிட் பெசி சட்டசபை உறுப்பினர் ரொஸ்லி தாவுத், முன்னாள் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அகமது சாயிட் மற்றும் அஜில் சட்டசபை உறுப்பினர் கசாலி தாயிப் ஆகியோர் செவ்வாய்க்கிழமை அம்னோவிலிருந்து தங்களது பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.

இதனிடையே, முன்னாள் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அகமது சாயிட்டும் அஜில் சட்டசபை உறுப்பினர் கசாலி தாயிப்பும் சுயெட்சை வேற்பாளராக நிக்க திட்டமிட்டிருப்பதாகவும் இதனை தொடர்ந்து இன்னும் பல விஷயங்கள் வெடிக்கும் என இதனை உறுதி படுத்திய அகமது சயிட்டின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை அகமது பதவி விலகியதைத் தொடர்ந்து டத்தோ அகமது ரசிவ் அப்துல் ரஹ்மான் புதிய திரெங்கானு மந்திரி புசாராக பதவியேற்றுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக