புதன், மே 21, 2014

இரயில் சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சனை இன்னும் சில நாடகளுக்குத் தொடரும் .

இன்று பல இடங்களில் இலகு இரயில் போக்குவரத்து தடைப்பட்டது. இதில் குறிப்பாக கிளானா ஜெயா நிலையத்திலிருந்து புறப்பட்டு கோம்பாக் செல்லும் இந்த இலகு இரயில் சேவை தடைப்பெற்றது. இதனால் பொதுமக்களின் அன்றாட பணி நிலைகுத்தியது. நகரத்தில் வாழும் பெரும்பாலானோர் வேலைக்குச் செல்ல இலகு இரயில் சேவையினையே நம்பியுள்ளனர். வாகன நெரிச்சலை தவிர்க்க இவர்கள் இச்சேவையினைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சமீபகாலமாக ஏற்படும் இவ்வாரானாப் பிரச்சனை பொது மக்களின் அன்றாட பணியைப் பாதிப்பதோடு இப்பிரச்சனையைத் தவிர்க்க அவர்கள் மீண்டும் தங்களது வாகனங்களைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். இதனால் நகரில் பல இடங்களில் வழக்கத்துக்கு மாறான போக்கு வரத்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த இலகு இரயில் சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சனை இன்னும் சில நாடகளுக்குத் தொடரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.                                         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக