சனி, மே 10, 2014

செந்துலில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, ஐந்து பேர் காயம்

செந்துலில் உள்ள உணவகம் ஒன்றில் இன்று காலை நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர்.

இன்று அதிகாலை 4.50 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவத்தில் பெரொடுவா மைவியில் வந்த ஆடவர் ஒருவரால் மிக அருகாமையில் சுடப்பட்டதாக நம்பப்படுகிறது.
பின்னர் துப்பாக்கியால் சுட்ட அந்த ஆடவர் காரில் தயாராக இருந்த நண்பருடன் ஏறி மின்னல் வேகத்தில் மறைந்தார்.
22 முதல் 51 வயதுக்குட்பட்ட அந்த ஆறு பேரும் கை, கால், தோள்பட்டை மற்றும் கன்னத்தில் காயமடைந்தனர்.

சம்பவ இடத்தில் சோதனையிட்ட தடவியல் நிபுணர்கள் 8 துப்பாக்கி தோட்டாக்களைக் கண்டெடுத்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக