சனி, மே 03, 2014

சிதம்பரத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 3 பேர் காயம்

சிதம்பரத்தில் குடியிருப்புப் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் காயமடைந்தனர். சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சிதம்பரம் மாரியம்மாள் நகரில் இன்று காலை பலத்த வெடி சத்தம் கேட்டது. அப்பகுதியில் உள்ள மருந்துக்கடையின் மாடியில் உள்ள அறையில் இருந்தே அந்த பயங்கர சத்தம் வந்தது.

இது குறித்து போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து வந்தனர். அவர்களுடன் வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.போலீஸ் முதல் கட்ட விசாரணையில்: அந்த அறையில் 4 பேர் இருந்ததாகவும், அவர்களில் 3 பேர் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், காயமடைந்த மூவரில் ஒருவர் சிதம்பரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஊழியர் அருள் என அடையாளம் தெரியவந்துள்ளது. அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் போதே இந்த வெடிவிபத்து நடந்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.குடியிருப்புப் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் சிதம்பரத்தில் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த 1-ம் தேதி நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் பெண் ஒருவர் பலியானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக