வியாழன், மே 22, 2014

போராட்டத்திற்கான தருணம்: காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல் அழைப்பு

தேர்தலில் தோல்வியைத் தழுவிய நிலையில், "இது போராட்டத்துக்கான தருணம். நாம் தயாராவோம்" என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு, அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. உத்தரப் பிரதேசத்தின் 80 தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட அமேதி, சோனியா காந்தி போட்டியிட்ட ரே பரேலி தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

அமேதி தொகுதியில் வெற்றியடைந்ததை அடுத்து இன்று ராகுல் காந்தி மற்றும் தனது சகோதரி பிரியங்காவுடன் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து நன்றி தெரிவித்து பேசினர்.அப்போது ராகுல் பேசுகையில், "இது நமக்கு போராடுவதற்கான தருணம். நாம் போராடுவதற்கு தயாராக உள்ளோம். தற்போது நமது கட்சி அடைந்துள்ள பின்னடைவை போராடுவதற்கான களமாக மட்டுமே நாம் பார்க்க வேண்டும்" என்றார்.

அமேதி மக்கள் வெற்றியை தந்து தங்கள் மரியாதையை காப்பாற்றியுள்ளதற்கு, மக்களிடம் பிரியங்கா நன்றி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக