வியாழன், மே 01, 2014

அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 81 %, குறைந்த அளவாக ஜம்மு-காஷ்மீரில் 20 % வாக்குகளும் பதிவாகின.

பாராளுமன்ற தேர்தலையொட்டி நேற்று நடைபெற்ற ஏழாவது கட்ட வாக்குப்பதிவில் மேற்கு வங்காளத்தில் 81 சதவீதமும், ஆந்திராவை பிரித்து புதிதாக உருவாக்கப்பட தெலுங்கானா மாநிலத்தில் 68 சதவீதம் வாக்குகளும் பதிவாகின. 
குஜராத்தில் 62 சதவீதம், பீகாரில் 58 சதவீதம், உத்தரப்பிரதேசத்தில் 57 சதவீதம் வாக்குகளும் நாட்டிலேயே மிகக் குறைந்த அளவாக ஜம்மு-காஷ்மீரில் 20 சதவீதம் வாக்குகளும் பதிவாகின. டாமன், டியு மற்றும் டாட்ரா யூனியன் பிரதேசத்தில் 66 சதவீதம், நாக்ரா ஹவேலியில் 74 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக