புதன், மே 07, 2014

“எனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது”: பெண்ணைக் கூறுபோட்ட கயவன்

கடந்த இரு நாட்களுக்கு முன் சென்னை போரூர் அருகே உள்ள ஏரியில் ஒரு பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டிருந்தது கண்டிபிடிக்கப்பட்டது. இந்த பெண்ணை போலீசார் அடையாளம் கண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

திருமணமாகி மூன்றே மாதமான ரேகா என்ற இளம்பெண் தான் கொல்லப்பட்டவர் என்றும், அவரை ஒரு தலையாகக் காதலித்தவன் தான் இந்த கொடூரத்தைப் புரிந்துள்ளான் என்றும் தெரியவந்துள்ளது.
சென்னை அசோக் நகர் அருகே உள்ள நெசப்பாக்கத்தில் வசித்து வரும் ஶ்ரீ ராம் என்பவரின் மனைவி தான் ரேகா. கால் செண்டரிலும், உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராகவும் வேலை செய்து வரும் இவர், ஒரு நாள் வேலைக்குச் சென்றவர் பிறகு வீட்டிற்கு வரவேயில்லை.
பல இடங்களிலும் தேடிய பின்னரே அவருக்கு நேர்ந்த கொடூரம் பற்றி தெரிய வந்துள்ளது. காதலர்களான ஶ்ரீராமும் ரேகாவும் கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர்தான் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
பெண்ணின் உடலைக் அடையாளம் காட்டுவதற்குப் போலீசார் ஶ்ரீ ராமையும், உறவினர்களையும் அழைத்துச் சென்றபோது, அது ரேகாவின் உடல்தான் என கூறி ஶ்ரீராம் கதறி அழுதுள்ளார்.
ரேகாவின் மரணம் குறித்து போலீசார் விசாரணை செய்ததில் அவர், வேலை செய்த இடத்தில் கால் டெக்சி ஓட்டுனராக இருந்த சாம்சன் என்பவர் ரேகாவை ஒரு தலையாகக் காதலித்தது தெரியவந்துள்ளது. ஆனால் ரேகா தாம் வேறு ஒருவரை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் கூறி மறுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ரேகாவிற்கும் ஶ்ரீராமிற்கும் திருமணம் நடந்ததையறிந்த சாம்சன் கடும் கோபத்திற்கு ஆளானார். தமகுக்குக் கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற தீய நோக்கத்தில் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் ரேகாவை கடத்திச் சென்று உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார்.
ரேகாவை கொலை செய்து, கை, கால்களைத் துண்டு துண்டாக வெட்டி மூட்டை கட்டி போரூர் ஏரியில் வீசிவிட்டு சென்றுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது தலைமறைவாகிவிட்ட சாம்சனையும் அவனுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக