சனி, மே 10, 2014

மதுரை ரிங்ரோட்டில் ஆயுதங்களுடன் பதுங்கிய 6 வாலிபர்கள் கைது

மதுரை கருப்பாயூரணி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் மதுரை ரிங் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு பாலத்தின் அடியில் ஒரு கும்பல் பதுங்கி இருந்தது. அதனை பார்த்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

அவர்களிடம் கத்தி, அரிவாள், உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. விசாரணையில் அவர்கள் வண்டியூர் பகுதியை சேர்ந்த விஜய் (வயது21), மணிகண்டன் (21), செல்லபாண்டி(20), முத்து ராஜ் (20), மற்றொரு விஜய் (19) என்பது தெரியவந்தது.
இவர்கள் 6 பேரும் அந்த வழியாக வரும் வாக

னங்களை வழிமறித்து கொள்ளையடிக்கும் எண்ணத்தில் அங்கு பதுங்கி இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் கருப்பாயூரணி போலீசார் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக