திங்கள், மே 26, 2014

சோமாலியா நாடாளுமன்றம் மீது தாக்குதல்:10 பேர் பலி!

சோமாலியா நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலில் குறைந்த 10 பேர் பலியாகியுள்ளனர். பெரிய ஆயுதங்களை ஏந்தியவர்கள் வாயில் கதவை வெடிவைத்து தகர்த்துவிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் நுழைந்ததாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.

தாக்குதல் ஆரம்பித்த நேரத்தில் விவாதித்துக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் இரண்டு பேர் அரசியல்வாதிகள் என்று கருதப்படுகிறது.
சண்டை நீடித்துவருவதாகவும், அருகிலுள்ள பள்ளிவாசல் ஒன்றின் மேற்கூரையிலிருந்தபடி தாக்குதலை நடத்துபவர்கள் சுட்டு வருகிறார்கள் என்றும் பிபிசியிடம் பேசிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறினார்.
ஆப்பிரிக்க ஒன்றிய துருப்பினரும் சோமாலிய தேசியப் படையினரும் தாக்குதலை நடத்துபவர்களுக்கு எதிரான சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அல்ஷபாப் இயக்கம் இத்தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக