திங்கள், மே 19, 2014

பாராளுமன்ற தேர்தல் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு 4 லட்சம் ஓட்டுகள்

எஸ்.டி.பி.ஐ. கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:–
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி முதல் முறையாக, தமிழ் நாட்டில் 3 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது.

இந்த கட்சி சார்பில் வட சென்னையில் போட்டியிட்ட நிஜாம் முகைதீன் 14,897 ஓட்டுகள் பெற்றார். நெல்லை வேட்பாளர் முகமது முபாரக் 14,877 ஓட்டுகளும், ராமநாதபுரம் வேட்பாளர் நூர்ஜியாஜதீன் 12,541 ஓட்டுகளும் பெற்றனர்.
இது போல், அகில இந்திய அளவில் 30 தொகுதிகளில் போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக