வியாழன், மே 01, 2014

மோடி நல்ல பிரதமர் வேட்பாளர் கிடையாது: அமர்த்தியா சென்

நரேந்திர மோடி பிரதமராவது தனக்கு ஏற்புடையதாக இல்லாவிட்டாலும். மோடி பிரதமரானால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என ஒரு சிலர் கூறுவதிலும் தனக்கு உடன்பாடு இல்லை என்கிறார் நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமரத்தியா சென்.

மோடி பிரதமராவதில் எனக்கு மட்டுமல்ல பெரும்பாலான இந்தியர்களுக்கு உடன்பாடு இல்லை. ராமர் கோயில் கட்டுவதை பாஜக முன்னிலைப்படுத்தாதது நல்லது. ஆனால் இதை மட்டுமே வைத்துக் கொண்டு இந்து - முஸ்லீம் பிரிவினையை தனது எண்ண ஓட்டத்தின் ஒரு பகுதியாக கொண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு நபர் நிஜத்தில் அத்தகைய எண்ணங்களை கட்டுப்படுத்தி செயல்படுவார் என்ற முடிவுக்கு வரலாமா? இந்த பிரச்சினையை சற்றே உற்று நோக்க வேண்டும்.

சர்ச்சைக்குரிய விவகாரங்களை கருத்தில் கொள்ளாமல் இருப்பது தேர்தல் ரீதியாக சரியான முடிவு. இருப்பினும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்தால், தன் மீதான மத அடையாளத்தை நீக்குவதே பாஜகவின் மிகப்பெரிய சவாலாக இருக்கும்" என தெரிவித்தார்.

மோடி பிரதமர் பதவிக்கு தன்னை தகுதியானவராக்கிக் கொள்ளும் முயற்சி குறித்த கேள்விக்கு: "தேர்தலில் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற மேற்கொள்ளும் முயற்சிகளையும் உண்மையான உந்துதலின் பேரில் மேற்கொள்ளும் முயற்சிகளையும் வேறுபடுத்துவது கடினம். வாக்குகளை பெற மோடி தன்னை தகுதிப்படுத்திக் கொள்வது வரவேற்கத்தக்கதே. இருப்பினும், பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளும் போது மோடி பல்வேறு வாக்குறுதிகளை அளிக்க வேண்டியிருக்கும். நான் மோடி பிரதமராக வேண்டும் என ஆதங்கப்படவில்லை" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக