ஞாயிறு, மே 04, 2014

போர்ச் சுகல் ஓபன் டென்னிஸ் :சானியா மிர்சா-காரா பிளாக் இணை பட்டம் வென்றது.

போர்ச் சுகல் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் இரட் டையர் பிரிவு ஆட்டத்தில் சானியா மிர்சா-காரா பிளாக் இணை பட்டம் வென்றது.
தரவரிசை பட்டியலில் உச்சத்தில் உள்ள இந்திய-ஜிம்பாப்வே இணை செக் குடியரசு-ரஷ்ய நாட்டின் இணையான இவா ஹ்ரிடி னோவா மற்றும் வலேரியா சொலொவ்யெவா இணை யை கடும் போராட்டத்திற்கு பின் 6-4, 6-3 என்ற கணக்கில் தோற்கடித்தது.
ஒரு மணி நேரம் 18 நிமிடங்கள் நடைபெற்ற இப்போட்டி யின் முதல் செட் ஆட்டத்தில் ஆரம்பம் முதல் சானியா இணை அதிரடியாக ஆடி 3-1 என்ற கணக்கில் முன்னி லையில் இருந்தது. எனினும் தங்களது திறமை யான ஆட்டத்தின் மூலம் இவா-வலேரியா இணை 4-4 என்று கடுமையான போட்டி யை கொடுத்தது. பின்னர் சுதாரித்து அதிரடியாக ஆடி சானியா இணை முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற் றியது.
2ஆவது செட்டிலும் இரு தரப்புக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஒரு கட்டத்தில் இரு தரப்பும் 3-3 என்ற கணக்கில் விளை யாடிக்கொண்டிருந்தது. எனினும் அபாரமாக ஆடிய சானியா இணை 2ஆவது செட்டையும் 6-3 என்ற செட் கணக்கில் கைப்பற்றி பட்டம் வென்றது. சானியா-காரா இணைக்கு 9,919 யூரோ பரிசு தொகையாக வழங்கப்பட்டது குறிப் பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக