
சூறாவளியில், சிக்கி இறந்த இவற்றின் சடலங்கள், நேற்று முன்தினம், மிசிசிபி கடற்கரையில் ஒதுங்கத் துவங்கி உள்ளன. இதனால், அப்பகுதி முழுவதும் சகிக்க முடியாத துர்நாற்றம் வீசுகிறது. இதனால், நோய்க் கிருமிகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெரிய அளவில் சுகாதாரக்கேடு ஏற்படுத்தும் பிரச்னையானது.
செத்த பெருச்சாளிகளை அகற்றும் பணியில், ஒப்பந்ததாரர்கள் பலர், ஈடுபட்டு, 16 ஆயிரம் பெருச்சாளிகளின் ஊறிய சடலங்கள் அகற்றப்பட்டுள்ளன. இவற்றை தவிர, பாம்பு, முயல், மான் போன்றவற்றின் சடலங்கள், கரையில் ஒதுங்கி வருவதாக, ஒப்பந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.மிசிசிபி கடற்கரைக்கு, பொதுமக்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், காணக் கிடைக்காத காட்சியாக நினைத்து, சிலர் அவ்வப்போது இங்கு வந்து, செத்த எலிகளை அகற்றும் பணியை பார்த்துச் செல்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக