வெள்ளி, ஜூலை 26, 2013

இராமநாதபுரம்: பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திய பாசிஸ்டுகள்!

இராமநாதபுரம்: கடந்த 22.07.13 திங்கள் கிழமை பா.ஜ.க. சார்பாக கடையடைப்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. இராமநாதபுரத்தில் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் புகுந்து சில சமூக விரோதிகள் பள்ளிவாசலை சேதப்படுத்தியும் அங்கு இருந்த தொழுகைக்காக பயன்படுத்தும் தொப்பி, விரிப்பு, குர்ஆன் போன்றவற்றை எரித்தும் சிறுநீர் கழித்தும் மதவெறியோடு செயல்பட்டுள்ளார்கள்.

எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து மேற்கொண்டு எந்த அசம்பாவிதங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டதுடன் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக் கொண்டது. இராமநாதபுரத்தில் தொடர்ந்து முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்களின் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்தும் பயங்கரவாதிகளை கைது செய்ய வற்புறுத்தியும் அனைத்து ஜமாத்துகள் மற்றும் இயக்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக