செவ்வாய், ஜூலை 09, 2013

வெள்ளை மற்றும் கறுப்புத் தாடிக்காரர்களின் உருவப்பொம்மையை எரித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்!

புதுடெல்லி: இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு அப்பாவிகளை போலி என்கவுண்டரில் அநியாயமாக படுகொலைச் செய்த சம்பவத்திற்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. போலி செய்திகளை பரப்பி விசாரணை திசை திருப்புவதற்கான சில ஐ.பி அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் நடத்தும் முயற்சிகளை கேம்பஸ் ஃப்ரண்ட் கண்டித்துள்ளது.


போலி என்கவுண்டரில் அநியாயமாக கொல்லப்பட்ட இஷ்ரத் உள்ளிட்டோருக்கு எதிராக அவதூறு பிரச்சாரங்களை நடத்தி வழக்கை திசை திருப்புவது, பா.ஜ.கவின் சூழ்ச்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இதனை கண்டித்து நேற்று மதியம் 12 மணிக்கு டெல்லி ஜந்தர் மந்தரில், சி.பி.ஐ குற்றப்பத்திரிகையில் கூறும் வெள்ளை தாடிக்காரன் மற்றும் கறுப்புத் தாடிக்காரனின் உருவப்பொம்மைகளை எரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக