வியாழன், ஜூலை 25, 2013

தீவிரவாத வழக்குகளில் முஸ்லிம்கள் சிக்க வைக்கப்படுவதாக ஹிந்துக்களும் நம்புகின்றனர்! - ஆய்வு தகவல்!

CNN IBN - The Hindu இணைந்து இந்திய வாக்காளர்களிடம் நடத்திய ஆய்வின் முடிவுகள் முஸ்லிம்களுக்கு நம்பிக்கையளிப்பதாக அமைந்துள்ளது. "தீவிரவாத வழக்குகளில் முஸ்லிம்கள் வேண்டுமென்றே சிக்க வைக்கப்படுகின்றனரா?" என்ற கேள்விக்கு பெரும்பான்மை இந்திய வாக்காளர்கள் (41%) 'ஆம் அல்லது இருக்கலாம்' என்று பதிலளித்துள்ளனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஹிந்துக்கள் ஆவர். அதாவது, இப்படியாக ஒப்புக்கொண்டவர்களில் 40% ஹிந்துக்களும், 56% முஸ்லிம்களும் ஆவர். 

மார்க்கெண்டேய கட்சு போன்றவர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் கடும் முயற்சிகள் பலனளிக்க தொடங்கியுள்ளன. இதற்காக பாடுபடும் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த செய்தி குறித்த மேலதிக தகவல்கள் பெற ஆதார சுட்டி:http://www.thehindu.com/news/national/voters-including-hindus-feel-muslims-falsely-implicated-in-terror-cases/article4949104.ece?homepage=true 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக