செவ்வாய், ஜூலை 30, 2013

பயங்கர வெடி பொருட்களுடன் தீவிரவாதி கைது! -அத்வானி வருகைக்கு எதிராக சதி திட்டமா?

சேத்துப்பட்டு: திருவண்ணாமலை அருகே சேத்துப்பட்டு என்ற ஊரில் பயங்கர வெடிமருந்துகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முந்தினம் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியில் போளூர் மண்டல வருவாய் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சேத்துப்பட்டு அடுத்த கொளக்கரைவாடி பகுதியில் பைக்கில் வந்த இருவரை மடக்கிப் பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.
பிடிபட்ட அரிகுமார் (35) என்ற வாலிபரை சோதனையிட்டதில்,  பைக்கில்  420 டெட்டனேட்டர் குச்சிகளை அவர் கடத்தி வந்தது தெரிய வந்தது. உடனே அந்த வாலிபரையும் பறிமுதல் செய்யப் பட்ட 420 டெட்டனேட்டர்களையும் சேத்துப்பட்டு காவல்துறையினரிடம்  ஒப்படைத்து அதிகாரிகள் புகார் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர்  அரிகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தப்பியோடிய வாலிபரையும் தேடி வருகின்றனர். கடத்தி வரப் பட்ட வெடிப்பொருட்கள் குறித்தும், இதன் பின்னணியில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
சேலத்தில் படுகொலை செய்யப்பட்ட ஆடிட்டர் ரமேஷுக்கு அஞ்சலி செலுத்த  பாஜக தலைவர் அத்வானி தமிழகம் வர உள்ள நிலையில் பெருமளவில் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக