வெள்ளி, ஜூலை 12, 2013

மஹராஷ்ட்ரா: சரணடைய வந்தவர்களை சுட்டுக்கொன்ற போலீஸ்!

புனே: மஹராஷ்ட்ரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஆறு பெண் மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. அவர்கள் ஆயுதங்களை கீழே வைத்து சரணடைய தயாரான நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.

கொல்லப்பட்ட பெண்களில் நான்குபேரின் வயது 15க்கும் 16 வயதுக்கும் இடைப்பட்டதாகும். இவர்கள் ஆயுதங்களை கீழே வைத்து சரணடைய தயார் என்று தகவல் அளித்திருந்தனர்.
முதலில் இவர்களில் 2 பேரை கமாண்டோக்கள் சுட்டுக்கொன்றுள்ளனர். தப்பிப்பதற்காக மரத்தில் ஏறும்போது ஒருவரை சுட்டுக்கொலைச் செய்துள்ளனர். இதர நான்குபேர் சரணடைய தயாராக இருந்தபோது அவர்களை பலவந்தமாக பிடித்துச் சென்ற பாதுகாப்பு படையினர் அருகருகே வைத்து நான்குபேரையும் சுட்டுக்கொன்றுள்ளனர் என்று மதிஹரி பகுதியைச் சார்ந்த கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தி:தேஜஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக