செவ்வாய், ஜூலை 16, 2013

பிரிவினை ஏற்படுத்த முயற்சி செய்யும் பாஜகவுக்கு மம்தா எச்சரிக்கை!

இந்து தேசியவாதி என்று அறிவித்துள்ள நரேந்திர மோடி ராமகிருஷ்ண பரமஹம்சரை விட பெரியவரா என மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். ஹவுரா மாவட்டதில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்துக்களும், முஸ்லிம்களும் ஒரு கிளையில் பூத்த மலர்களை போன்றவர்கள் என்றும், தங்களுக்கு இரு பிரிவினர் மீதும் அக்கறை உண்டு என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்த பாரதிய ஜனதா முயன்று வருவதாகவும், மதத்தின் பெயரால் கலவரம் தூண்ட நினைப்பவர்களை தமது தலைமையிலான அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக