புதன், ஜூலை 17, 2013

புத்தகயா குண்டுவெடிப்பு: சந்தேக குற்றவாளியின் வரைபடத்தை வெளியிட்டது என்.ஐ.ஏ!

பீகார் புத்தகயா மகாபோதி கோவில் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான சந்தேக குற்றவாளியின் வரை படத்தை தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ வெளியிட்டுள்ளது. பீகார் மாநிலம் புத்தகயாவில் உள்ள மகாபோதி கோவிலில், கடந்த ஜூலை 7 ஆம் தேதி நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் 2 பேர் காயமடைந்தனர்.

இந்த இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், நேரில் பார்த்த சாட்சியம் மற்றும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நபரின் வரைபடத்தை தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்ஐஏ வெளியிட்டுள்ளது.
முகம் மூடிய நிலையில் ஒரு படத்தையும், முகம் தெளிவாக தெரியும் ஒரு படத்தையும் என்ஐஏ வெளியிட்டுள்ளது.

Source : NewIndia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக