செவ்வாய், ஜூலை 16, 2013

ஹரியானா: போதை விருந்தில் மாணவர்கள்! - 100-க்கும் மேற்பட்டோர் கைது!

ஹரியானா மாநிலத்தில் உள்ள மது குடி மையத்தில் போதை விருந்தில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளை போலீசார் கைது செய்துள்ளனர். மில்லினியம் சிட்டி என்று பெருமையுடன் அழைக்கப்படும் குர்கான் நகரில்தான் இந்த கலாச்சார சீரழிவு சம்பவம் அரங்கேறி உள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மாணவ மாணவிகளை கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து அங்கு விரைந்த மாணவர்களின் பெற்றோர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் 15 வயது முதல் 20 வயதுடையவர்கள் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக