செவ்வாய், ஜூலை 30, 2013

கல்விக் கொள்ளைக்கு எதிராக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போராட்டம்!

மதுரை: கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மதுரை மாவட்டம் சார்பாக 26.07.2013 மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கல்விக்கொள்ளைக்கு எதிரான மாணவர் போராட்டத்தை நடத்தியது.

ஃபாத்திமா மைகேல் கல்லூரி மாணவர்களிடம் நுழைவுக் கட்டணம் என்ற பெயரில் கல்விக் கொள்ளையில் இறங்கியுள்ளது. மேலும் மாணவர்களுக்கு வாகன வசதிகளை செய்து தராமலும், மாணவர்களை தரக்குறைவாகவும் நடத்தியும் உள்ளனர் . இம்மாதிரி மாணவர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்ட கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் போராட்டத்தை நடத்தியது. இப்போராட்டத்திற்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவாட்ட தலைவர் தோழர் சுல்தான் தலைமை தாங்கினார் . மாநில பொருளாளர் தோழர் பக்ருதீன் , மாவட்ட செயலாளர் தோழர் இப்ராஹிம் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். இப்போராட்டத்தின் இறுதியில் மாவட்ட துணை ஆட்சியாளரை சந்தித்து பிரச்சினை சம்பந்தமாக மனு அளித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக