செவ்வாய், ஜூலை 23, 2013

தமிழகத்தில் சங்க்பார் தலைவர்களின் மரணம்! - விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தும்!

சென்னை: தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் வி.ரமேஷ் கொலைச் சம்பவம் தொடர்பாக சிறப்புப் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கை விரைந்து விசாரிப்பதற்காக சிறப்புப் புலனாய்வுப் பிரிவை அமைக்குமாறு தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டுள்ளதாகவும், இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் வெள்ளையப்பனின் கொலைச் சம்பவத்தையும் இந்த சிறப்புப் பிரிவினர் விசாரணைக்கு எடுத்துக்கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிபிசிஐடி டி.ஜி.பி. தலைமையின் கீழ் இந்த சிறப்புப் புலனாய்வுப் பிரிவு செயல்படும். இந்தக் கொலை வழக்குகளில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதற்கான ஆள் பலம் மற்றும் தேவைப்படும் வசதிகளை இந்தப் பிரிவுக்கு அவர் வழங்குவார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக