திங்கள், ஜூலை 01, 2013

காஷ்மீரில்: தீவிரவாதிகள் என்று தவறாக நினைத்து 2 இளைஞர்களை சுட்டு கொன்ற இந்திய ராணுவம்!

காஷ்மீர் மாநிலம் பாண்டி போரா மாவட்டம் சம்பல் பகுதியில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் தீவிரவாதிகள் என்று நினைத்து 2 இளைஞர்கள் ராணுவ வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட ஒரு வாலிபரின் பெயர் இர்பான் அகமது, மற்றொருவர் பெயர் இர்ஹாத் அகமது. இருவரும் சம்பல் பகுதியில் உள்ள மார்க்குண்டால் கிராமத்தை சேர்ந்தவர்கள்.
இதுகுறித்து காஷ்மீர் மாநில உயர்கல்வித்துறை மந்திரியும், அந்த பகுதி எம்.எல்.ஏ.வுமான முகமது அக்பர் கூறும்போது இரண்டு இளைஞர்கள் இன்று காலை ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம் ஆகும் என்றார்.
2 இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ராணுவத்தினரை கண்டித்து அந்த பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக