திங்கள், மே 28, 2012

மன்மோகன் நேர்மையானவர்: ஹஸாரே பல்டி !

Anna Hazare says Prime Minister is honestசோலாப்பூர்:பிரதமர் மன்மோகன்சிங் ஒரு நேர்மையான மனுஷர் என அன்னா ஹஸாரே கூறியுள்ளார். கடந்த சனிக்கிழமை ஹஸாரே குழுவினர் பிரதமர் உள்ளிட்ட 15 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியிருந்த சூழலில் ஹஸாரே இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. பந்தர்பூரில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களிடம் அன்னா ஹஸாரே
பேசுகையில், ’மன்மோகன் சிங் அமைச்சரவையில் உள்ள சிலர் ஊழல்வாதிகளாக இருந்தாலும், அவர் நேர்மையானவர். புது தில்லியில் ஜூன் 3, 4 தேதிகளில் எங்களது உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது’ என்று ஹஸாரே கூறினார்.
ஹஸாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கேஜரிவால், பிரசாந்த் பூஷண் ஆகியோர், பிரதமர் உள்பட 15 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி சனிக்கிழமை அறிக்கை வெளியிட்டிருந்தனர். தங்கள் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையிலிருந்து சில பகுதிகளை எடுத்துக் காட்டியிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக