வியாழன், மே 31, 2012

ராணுவ தளபதி வி.கே.சிங் ஓய்வு பெற்றார் !

ராணுவ தளபதி வி.கே.சிங் ஓய்வு பெற்றார்
 ராணுவ தளபதியாக இருந்த வி.கே. சிங் இன்று ஒய்வு பெற்றார். இதையொட்டி அவர் டெல்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் மலர் வளையம்  வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரை ராணுவ வீரர்கள்  அணிவகுப்பு மரியாதையுடன் வழியனுப்பி வைத்தனர். வி.கே.சிங் 42 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி உயர் பதவிகளை வகித்தார். வயது பிரச்சினையால் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். 

ராணுவத்துக்கு தரம் குறைந்த வாகனங்கள் வாங்க தன்னிடம் பேரம் பேசியதாக குற்றம்சாட்டி பரபரப்பு ஏற்படுத்தினார். ஒய்வு பெற்ற வி.கே.சிங் கூறுகையில் புதிய ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள விக்ரம் சிங்குக்கு அனைவரும் ஒத்து ழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக