இதன்மூலம் 2009-10 காலகட்டத்தில் ரூ.120 கோடி வருவாய் கிடைத்துள்ளது. எனவே இதை வர்த்தக நடவடிக்கையாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இந்த ஆயுர்வேத மருந்துகள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக அவரது அறக்கட்டளைகள் வருமான வரியிலிருந்து விலக்கு பெற்று வந்தன. ராம்தேவ் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் சிறப்புத் தணிக்கையில் ஈடுபட்டனர். ராம்தேவின் அறக்கட்டளைகள் அன்னியச் செலாவணியில் முறைகேடுகள் செய்ததான புகார் குறித்து அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். வருமான வரித்துறையினரின் ஆய்வு அந்த விசாரணைக்கும் உதவிகரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ராம்தேவின் அறக்கட்டளைகள் கணக்கு வைத்துள்ள வங்கிகளின் ஆவணங்களைப் பெற்று ஆய்வு செய்த பின்பு இந்த தணிக்கையை சோதனையை வருமான வரித்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
ரூ.7 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக அன்னியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் ராம்தேவின் அறக்கட்டளைகள் மீது அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராம்தேவ் தனது வர்த்தக நிறுவனங்களின் வருவாய் மதிப்பு ரூ.1,100 கோடிக்கும் மேல் என்று கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.
அவரது நான்கு அறக்கட்டளைகளிலும் ரூ.426.19 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், எனினும் அவற்றின் செலவு ரூ.751.02 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக