புதன், மே 23, 2012

+2 தேர்வில் நாமக்கல் சுஷ்மிதா முதலிடம்-3 இடங்களும் நாமக்கல்லுக்கே !

 2 Results Will Be Released Today
 சென்னை: பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியாகியது. இதில் நாமக்கல்லைச் சேர்ந்த எஸ்.கே.வி மேல்நிலைப்பள்ளி மாணவி சுஷ்மிதா 1189 மதிப்பெண்களுடன் மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளார்.2வது இடமும் நாமக்கல்லுக்கே அதே நாமக்கல்லைச் சேர்ந்த எஸ்.கே.வி மேல்நிலைப்பள்ளி கார்த்திகா, நாமக்கல் கிரீன்பார்க் பள்ளி மாணவர் அசோக்குமார், நாமக்கல் விவேகானந்தா பள்ளி மாணவர் மணிகண்டன் ஆகியோர் 1188 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

3வது இடமும் நாமக்கல்லுக்கே

அதேபோல மூன்றாவது இடத்தையும் நாமக்கல் மாணவர்களை பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த வித்யா விகாஷ் பள்ளி மாணவி மகேஸ்வரி, நாமக்கல் எஸ்.கே.வி. பள்ளி மாணவி பிரபாசங்கரி ஆகியோர் 1187 மதிப்பெண்களுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளனர்.

முதல் மூன்று இடங்களையும் நாமக்கல் மாணவர்களேப் பிடித்து புதிய சாதனையை படைத்துள்ளனர்.

பிளஸ் டூ தேர்வு கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி தொடங்கி 30ம் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8.22 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 3.53 லட்சம் பேர் மாணவர்கள். 4.07 லட்சம் பேர் மாணவிகள். 61,319 பேர் தனித் தேர்வர்களாகவும் தேர்வு எழுதினர்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 40 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடந்தது. இந்தப் பணியில் சுமார் 35,000 ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இந்தப் பணி ஏப்ரல் 30ம் தேதி முடிவடைந்தது.

இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டது.

இந்த ஆண்டு முதல் முதலாக மாணவ- மாணவிகளுக்கு போட்டோவுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.



மேலும் www.tnresults.nic.inwww.dge1.nic.inwww.dge2.nic.inwww.dge3.nic.inwww.tn.pupliclibraries.gov.in ஆகிய அரசு இணையதளங்களிலும் காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக