ஞாயிறு, மே 27, 2012

எடியூரப்பா பா.ஜ.கவில் மனித வெடிக்குண்டு! – பால் தாக்கரே!

மும்பை:கர்நாடகா மாநில முன்னாள் முதல்வரும், சுரங்கத்தொழில் ஊழலில் பிரசித்திப் பெற்றவருமான எடியூரப்பா பா.ஜ.கவில் மனித வெடிக்குண்டு என மும்பை முஸ்லிம் படுகொலை புகழ் பால்தாக்கரே கூறியுள்ளார். மேலும் கட்கரி செல்லும் பாதை கண்ணிவெடி புதைத்த பாதையாகும் என அவர் கூறியுள்ளார்.

சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் எழுதிய தலையங்கத்தில் பால்தாக்கரே இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் எழுதியிருப்பது: பா.ஜ.கவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பங்கேற்பதை உறுதிச்செய்யவே, சஞ்சய் ஜோஷியை ராஜினாமாச் செய்யவைத்துள்ளனர். மும்பை கூட்டத்தில் மோடி பங்கேற்க வேண்டுமெனில் ஜோஷி வெளியேற வேண்டுமென்ற நிர்பந்தத்தை பாரதிய ஜனதா ஏற்றுக்கொண்டது. நிதின் கட்கரியை மீண்டும் பா.ஜ.கவின் தேசிய தலைவராக்க பா.ஜ.க, மோடியின் ஒப்புதலை கோரியது.இவ்வாறு பால்தாக்கரே கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக