தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் மமதா சர்மா, பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு நேற்று(வியாழக்கிழமை) அளித்த பேட்டியில் கூறியது:
பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளில், யார் பக்கமும் சாராமல் பொதுப்படையான விசாரணைகள் நடத்த மாநில அரசு உறுதியளித்திருக்கிறது. ஆயினும், அது போன்ற நடவடிக்கைகள் இன்னும் எடுக்கப்படவில்லை.
வழக்கு விசாரணை துரிதமாகவும் குறிப்பிட்ட காலவரையறை வகுத்தும் நடைபெற வேண்டும். விசாரிப்பு தடைபடக் கூடாது. விசாரணை செய்யும் அதிகாரி பாதி விசாரணையில் இடமாற்றம் செய்யப்படக் கூடாது. குற்றம் செய்தவர்களுக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும்.
தேசிய அளவில் உள்ள பாலியல் பலாத்கார அளவைவிட மேற்கு வங்கத்தில் இரு மடங்கு உள்ளது. ஆயினும் மமதா பானர்ஜியின் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்று நான் கூறவில்லை என்று தேசிய மகளிர் ஆணையத் தலைவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக