சனி, மார்ச் 15, 2014

நடிகர் சயிப் அலிகான் மீது கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு


வெளிநாடு வாழ் இந்தியரை தாக்கிய வழக்கில் நடிகர் சயிப் அலிகான் மற்றும் அவரது நண்பர்கள் மீது கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இந்தி நடிகர்
இந்தி நடிகர் சயிப் அலிகான் தனது மனைவியும் நடிகையுமான கரீனா கபூர், மைத்துனி கரீஷ்மா கபூர் மற்றும் தனது நண்பர்கள் சகீல் லடாக், பிலால் அம்ரோகி உள்ளிட்டோருடன் கடந்த 2012–ம் ஆண்டு பிப்ரவரி 22–ந்தேதி மும்பை தாஜ் ஓட்டலுக்கு சென்றிருந்தார்.
அப்போது அங்குள்ள உணவு விடுதியில் இருந்த வெளிநாடு வாழ் இந்தியர் இக்பால் மிர் சர்மா என்பவருடன் தகராறு உண்டானது. இந்த தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த நடிகர் சயிப் அலிகான் மற்றும் அவரது நண்பர்கள் அவரை மூக்கில் குத்தி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அவரது மாமனார் ராமன் பட்டேலையும் தாக்கினர்.


குற்றசாட்டு பதிவு
இது குறித்து இக்பால் மிர் சர்மா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு நடிகர் சயிப் அலிகான் மற்றும் நண்பர்கள் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் 21–ந் தேதி நடிகர் சயின் அலிகான் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேர் மீதும் கோர்ட்டில் குற்றபத்திக்கை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்தது. அப்போது, நடிகர் சயீப் அலிகான் மற்றும் அவரது நண்பர்கள் மீது நீதிபதி குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக