போர்க் கப்பல்கள் ஒவ்வொன்றிலும் 300 வீரர்கள் உள்ளனர். அமெரிக்க குடிமக்களுக்கு பாதுகாப்புக்கு தேவையான ஆதரவை அளிக்குமாறு ஒபாமா உத்தரவிட்ட சில மணிநேரங்களிலேயே போர்க்கப்பல்கள் லிபியாவை நோக்கி விரைந்துள்ளன. உலகம் முழுவதும் உள்ள தூதரக அலுவலகங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க ஒபாமா உத்தரவிட்டுள்ளார். போர்க் கப்பல்களை அனுப்பியதுக் குறித்து பதிலளிக்க பெண்டகன் செய்தித் தொடர்பாளர் ஜார்ஜ் லிட்டில் மறுத்துவிட்டார். ஆனால், அமெரிக்க படை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
அமெரிக்க தூதரகங்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து லிபியா மற்றும் எகிப்து அதிபர்களுடன் ஒபாமா தொலைபேசியில் பேசினார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் தூதர் மற்றும் மூன்று அமெரிக்க தூதரக அதிகாரிகளின் மரணம் தொடர்பான விசாரணைக் குறித்தும் அவர் வினவினார்.
இதனிடையே லிபியாவின் பெங்காசி அமெரிக்க தூதரகத்தில் நடந்த தீவைப்புச் சம்பவத்தில் பலியான அமெரிக்க தூதர் ஸ்டீவன்ஸின் பாதுகாவலர் பாதியிலேயே விட்டுச் சென்றதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே, ஸ்டீவன்ஸ் புகை காரணமாக மூச்சுத் திணறி உயிரிழந்தாரா அல்லது வேறு காரணங்களால் உயிரிழந்தாரா என்பது பற்றி உடல்கூறு ஆய்வறிக்கையில் தெரியவரும் கருதப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக