
இந்நிலையில் இன்று காலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக அமெரிக்க தூதரகம் முன்பாக போராட்டம் நடைபெற்றது.
சென்னை அண்ணாசாலை பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் திரண்டனர். இறைத்தூதர் நபிகள் நாயகத்தை விமர்சித்து திரைப்படம் எடுத்த அமெரிக்க பாதிரியாரின் படத்தை எரித்தும், அமெரிக்க தேசியக் கொடியை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து அமெரிக்க துணை தூரகத்திற்கு முன்னர் குவிந்த முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை:
நேற்று போராட்டத்தின் போது அமெரிக்க தூதரகம் மீது கல்வீச்சு சம்பவம் நடைபெற்றதால் முன்னெச்சரிக்கையாக போலீஸார் கண்ணீர் புகை குண்டு மற்றும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனத்துடன் தயாராக இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக